உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உண்மையை மட்டுமே பேசு என்கிறார் வள்ளலார்

உண்மையை மட்டுமே பேசு என்கிறார் வள்ளலார்

* உண்மையை பேசு. உன் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.  
* நல்லவர்களின் மனம் நடுங்கும்படி செயல்படாதே.
* நல்ல மனதுடன் இருப்பதே உயர்ந்த வழிபாடு.
* பணம் மட்டுமே வாழ்க்கை என நினைக்கும் நபர்களுடன் நட்பு கொள்ளாதே.
* எப்போதும் பொதுநோக்கத்துடன் செயல்படு.
* பசியால் துன்பப்படும் உயிர்களுக்கு உணவு கொடு. இதுவே தர்மத்தில் சிறந்தது.
* ஜாதி, சமயம், இனம், நிறம், நாடு, மொழி என எந்த வகையிலும் பேதம் பார்க்காதே.  
* பிற உயிர்கள் மீது இரக்கப்படு. கடவுள் உனக்கு நிச்சயம் அருள்புரிவார்.
* மரங்களை அழிக்காதே. அது பாவச்செயல்.
* எல்லாம் கடவுளின் செயல் என அறிந்தால் துன்பம் வராது.
* மெதுவாக பேசு. இது உன் ரகசியங்களை பாதுகாக்கும்.
* பறவைகளை கூண்டில் அடைத்து அவற்றை துன்புறுத்தாதே.
* புண்ணியத்தால் மனித பிறவி கிடைத்துள்ளது. சரியாக பயன்படுத்து.
* பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டு பொய் சொல்லாதே.
* ‘எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும்’ என கடவுளிடம் வேண்டிக்கொள்.
* அனைவரிடமும் நல்லவிதமாக பேசி புண்ணியத்தை தேடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !