காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பல்லவ உத்சவம் நிறைவு
ADDED :3 hours ago
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பல்லவ உத்சவம் நிறைவடைந்தது. உத்சவத்தின் நிறைவு நாளான நேற்று, ப்ரணதார்த்தி ஹர வரதர், ஸ்ரீதேவி, பூதேவியருடன் வரதராஜ பெருமாள் மலர் அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.