உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் தீ் : பக்தர்கள் ஓட்டம்

திருத்தணி முருகன் கோவிலில் தீ் : பக்தர்கள் ஓட்டம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், மூலவரை தரிசித்த பின், தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற நெய் தீபம் ஏற்றி வழிபடுவர். இதற்காக, கோவில் நிர்வாகம் தேர்வீதியில் வேல் மண்டபம் எதிரே உப்பு, மிளகு விற்பனை செய்யும் கடை அருகே, இரும்பு தகடுகளால் தீபம் ஏற்றுவதற்கு வசதியாக, ‘ரேக்’ அமைத்துள்ளது. இந்த ‘ரேக்’கில் பெண்கள் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வர். நேற்று தமிழ் புத்தாண்டு என்பதால், ஆயிரக்கணக்கான பெண்கள் நெய் தீபம் ஏற்றியதால், தீ கொழுந்து விட்டெரிந்தது. இதனால் பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து, மலைக்கோவிலில் இருந்த போலீசார் மற்றும் துாய்மை பணியாளர்கள் 10க்கும் மேற்பட்டோர், வாளி மற்றும் குடங்கள் உதவியுடன் தண்ணீர் ஊற் றி, 20 நிமிடங்களுக்கு பின் தீ பரவுவதை கட்டுப்படுத்தினர். அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நெய் தீபம் ஏற்றும் இடத்தில் அடிக்கடி இதுபோன்ற தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க, கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !