புதுச்சேரி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :1 days ago
புதுச்சேரி: புதுச்சேரி சின்ன சுப்பராய பிள்ளை வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. சித்திரை மாதஅமாவாசையை முன்னிட்டு,சின்ன சுப்பராய பிள்ளை வீதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதனைத் தொடர்ந்து மாலை 6:30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. அமாவாசை தினத்தின் முக்கிய நிகழ்வாக அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் உற்சவர் அம்மன் எழுந்தருள, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.