உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

பரமக்குடி: பரமக்குடி ஈஸ்வரன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.


பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம் விசாலாட்சி அம்பிகா சந்திரசேகரசுவாமி (ஈஸ்வரன்) கோயில் உள்ளது. கோயிலில் நேற்று இரவு காப்பு கட்டப்பட்டு, இன்று காலை 10:00 மணிக்கு கொடிமரத்தில் நந்தி கொடியேற்றப்பட்டது. பின்னர் அபிஷேகம் நடந்து மகா தீபாராதனைக்கு பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இரவு பஞ்ச மூர்த்திகள் சிம்மாசனத்தில் புறப்பாடு நடந்தது. தினமும் நந்தி, கிளி, குண்டோதரன், சிம்மம், கற்பக விருட்சம், அன்னம், காமதேனு, ரிஷப வாகனங்களில் உலா வருவர். ஏப்., 26 காலை நடராஜர் புறப்பாடு, இரவு குதிரை வாகனத்தில் சந்திரசேகர சுவாமி, விசாலாட்சி திக் விஜயம் நடக்கிறது. ஏப்., 27 காலை விசாலாட்சி கமல வாகனத்தில் தபசு திருக்கோலத்தில் எழுந்தருளுகிறார். அன்று மாலை 5:00 மணிக்கு சுவாமி, அம்பாள் மாலை மாற்றல் நடக்கும். ஏப்., 28 காலை 11:00 மணிக்கு விசாலாட்சி, சந்திரசேகரசுவாமி திருக்கல்யாணம் நடந்து, இரவு பூ பல்லக்கில் பட்டன பிரவேசம் வருகின்றனர். ஏப்., 29 காலை 9:15 மணிக்கு சித்திரை தேரோட்டம் ரத வீதிகளில் நடக்கிறது. மறுநாள் தீர்த்தவாரி உற்சவம் மற்றும் இரவு கொடி இறக்கப்படும். மே 1 காலை உற்சவ சாந்தி, அபிஷேகம் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !