உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூலூர் ஸ்ரீ வைத்திய நாத சுவாமி கோவில் ஆண்டு விழா: சிறப்பு அபிஷேகம்

சூலூர் ஸ்ரீ வைத்திய நாத சுவாமி கோவில் ஆண்டு விழா: சிறப்பு அபிஷேகம்

சூலூர்: சூலூர் ஸ்ரீ வைத்தியநாத சுவாமி கோவிலில் நடந்த முதலாம் ஆண்டு விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


சூலூர் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள ஸ்ரீ தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. கடந்த ஆண்டு திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடந்தது. முதலாம் ஆண்டு விழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. புனித நீர் கலசங்கள் நிறுவப்பட்டு, மூல மந்திர ஜப ஹோமங்கள், பாராயணம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், இளநீர், தேன், வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மேள, தாளத்துடன் புனித நீர் கலசங்கள் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டு, சிவாச்சாரியார்கள், மூலவ தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்தனர். அலங்கார மகா தீபாராதனை நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று எம்பெருமானை மனமுருக வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !