உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விடுமுறை நாள் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்

விடுமுறை நாள் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்

ராமேஸ்வரம்: விடுமுறை நாள் யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தமிழக பள்ளிகளுக்கு கோடைகால விடுமுறை யொட்டி நேற்று தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரம் கோயிலில் குவிந்தனர். பக்தர்கள் முதலில் கோயில் அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு, கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினார்கள். பின் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் காத்திருந்து பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். பின் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வாகனங்களில் தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு சென்று கடல் அழகை கண்டு ரசித்தனர். இங்கு வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி இல்லாததால், தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் வாகனங்களை நிறுத்தினர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்களை திரும்பி செல்ல முடியாமல் மக்கள் சிரமப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !