உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி சங்கராசாரியாரிடம் ஆசி பெற்ற நாகலாந்து கவர்னர் நந்த் கிஷோர் யாதவ்

காஞ்சி சங்கராசாரியாரிடம் ஆசி பெற்ற நாகலாந்து கவர்னர் நந்த் கிஷோர் யாதவ்

காஞ்சிபுரம் : நாகலாந்து மாநில கவர்னர் நந்த் கிஷோர் யாதவ், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.


காஞ்சிபுரம் வந்த நாகலாந்து மாநில கவர்னர் நந்த் கிஷோா் யாதவ் நேற்று காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். அவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் சிறப்பு மரியாதை மற்றும் அம்மன் திருஉருவப்படம், காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் படம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்ற கவர்னர் அங்கு நடைபெற்ற சந்திரமெளலீசுவரா் பூஜையில் கலந்து கொண்டாா். அதனைத்தொடர்ந்து, காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றாா். சங்கராசாரியா் சுவாமிகள் ஆதிசங்கரரின் உருவப்படம் வழங்கி சால்வை அணிவித்து கவர்னருக்கு ஆசி வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !