உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரத்தில் கோடை மழை : பக்தர்கள் அவதி

ராமேஸ்வரத்தில் கோடை மழை : பக்தர்கள் அவதி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கோடை மழையால் கோயில் ரதவீதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பக்தர்கள் அவதிப்பட்டனர்.


ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் சில நாட்களாக தென்மேற்கு பருவக்காற்று வீசியதால் வெப்ப சலனத்தை தணித்தது. இந்நிலையில் இன்று காலை கோடை மழை ராமேஸ்வரம் பகுதியில் பரவலாக பெய்தது. இதில் ராமேஸ்வரம் கோயில் நான்கு ரதவீதி, நகராட்சி அலுவலகம் முன்பு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் ரதவீதியில் பெரும் சிரமத்துடன் நடந்து சென்றனர். மேலும் தனுஷ்கோடிக்கு சென்ற சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் ஆட்டோக்கள் தேங்கி கிடந்த மழைநீரில் வீழ்ச்சி ஊர்ந்தபடி சென்றது. இந்த கோடை மலையால் நேற்று முழுவதும் ராமேஸ்வரம் பகுதியில் வெப்ப சலனம் இன்றி குளுகுளு என இருந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !