உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தில்லை சிவகாளி அம்மனுக்கு அமுது படையல்; வளைகாப்பு விழா

தில்லை சிவகாளி அம்மனுக்கு அமுது படையல்; வளைகாப்பு விழா

அலங்காநல்லுார்: கொண்டையம்பட்டி வயித்து மலை அடிவாரத்தில் ஓம் சிவசுப்பிரமணியர் கோயில் உள்ளது. இங்குள்ள தில்லை சிவகாளி அம்மனுக்கு அமுது படையல் மற்றும் வளைகாப்பு விழா மே 1 துவங்கியது. மே 8ல் சுவாமி, அம்மன், பரிவார தெய்வங்களுக்கு பொங்கல் வைத்தல், 9ல் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன, நேற்று அம்மன் குழந்தை பருவம் துவங்கி 36 வகை ஆடை அலங்காரம், பல்வகை உணவு படைக்கப்பட்டது. 24 மணிநேரம் தொடர் அமுது படையல் பூஜைகள் நடந்தன. சடங்கு சீர்வரிசையுடன் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. அம்மனுக்கு, குழந்தை இல்லாதவர்களுக்கு வளைகாப்பு விழா கூட்டு வழிபாடு நடந்தது. மாலை பக்தர்கள் கிராம செல்வ விநாயகர் கோயிலில் இருந்து அக்னிசட்டி, முளைப்பாரி எடுத்து வந்தனர்.இரவு சக்தி கிடா வெட்டுதல் சிறப்பு பூஜைகள் நடந்தன. இன்று (மே 11) காலை அடசல் பூஜையும், படையல் பிரித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். அம்மனுக்கு திருமஞ்சன காப்பு சாத்துதல் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி ஹரிபகவான் மற்றும் பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !