உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநாங்கூரில் ஒரே இடத்தில் 12 சிவபெருமான் திருகல்யாணம் கோலாகலம்

திருநாங்கூரில் ஒரே இடத்தில் 12 சிவபெருமான் திருகல்யாணம் கோலாகலம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருநாங்கூரில் மதங்காஸ்ரமத்தில் மதங்கரிஷி தவம் செய்யும்போது பார்வதிதேவி பெண்ணாக அவதரித்து பின்பு சிவபெருமானை திருமணம் செய்து கொண்டு மதங்க ரிஷிக்கு திருமணக்கோலத்தில் காட்சி கொடுத்ததாகவும், அதைத் தொடர்ந்து 12 சிவபெருமான்கள் அம்பாள்களுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி  திருக்கல்யாண கோலத்தில் வீதியுலா செல்லும் ஐதீக விழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் ரோகினி நட்சத்திரத்தில் நடைபெறுவது வழக்கம் இதனை கொண்டாடும் விதமாக இன்று 12 சிவபெருமான்கள் திருகல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 


அதனை முன்னிட்டு திருநாங்கூர் அஞ்சனாக்ஷி சமேத மதங்கீஸ்வர சுவாமி,  திருக்காட்டுபள்ளி அகிலாண்டேசுவரி  சமேத ஸ்ரீ ஆரண்யேசுவரசுவாமி, திருயோகீசுவரம் யோகாம்பிகை சமேத  யோகநாதசுவாமி, திருசொர்ணபுரம் சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வர சுவாமி, திருநாங்கூர் சந்திராசு அம்பாள் சமேத அமிர்தபுரீசுவர சுவாமி, செம்பதனிருப்பு நற்றுணைநாயகி சமேத   நாகநாதசுவாமி, திருநாங்கூர் நம்பிரியான் சமேத நம்புவார்கன்யசுவாமி, திருநாங்கூர்  காமாட்சி சமேத கைலாசநாத சுவாமி,  திருமேனிக்கூடம் சௌந்தரநாயகி சமேத  சுந்தரேசுவரசுவாமி, பெருந்தோட்டம்  அதிதுல்ய குஜாம்பிகை சமேத ஐராவதேசுவர சுவாமி, அன்னப்பன்பேட்டை   சுந்தரநாயகி சமேத கலக்காமேசுவரசுவாமி, நயினிபுரம் நளினாம்பிகை சமேத நயனவரதேசுவசுவாமி ஆகிய 12 சிவபெருமான் திருநாங்கூர் கீழவீதியில் உள்ள மதங்காஸ்ரமம் எனும் மதங்கீசுவரர் சுவாமி கோயிலில் எழுந்தருளினர். சிறப்பு வழிபாடுகளுக்கு பிறகு 12 சுவாமி அம்பாள்களும் ரிஷப வாகனங்களில் எழுந்தருளினர். தொடர்ந்து சீர்வரிசை எடுத்து வரப்பட்டு திருமண சடங்குகள் தொடங்கி நடந்தது. பின்னர் 12 சுவாமி அம்பாள் திருக்கல்யாண உத்ஸவம் ஒரே நேரத்தில்  நடைபெற்றது. அதனை அடுத்து திருகல்யாண கோலத்தில் மதங்க ரிஷிக்கு காட்சி கொடுத்தனர். பின்னர் வேதபாராயணம் திருமுறை பாராயணம், கைலாய வாத்தியங்கள், பஞ்சவாத்தியங்கள் நாகசுவர இன்னிசை கச்சேரியுடன் வாணவேடிகைகள் முழங்க 12 சிவபெருமான்கள் அம்பாள்களுடன்  வீதியுலா செல்லும் நிகழ்வு நடைபெற்றது.  ஆயிரகணக்கான பக்தர்கள்  தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !