சுந்தரராஜ பெருமாள் கோவில் பிரம்மோத்சவ விழா; கருட வாகனத்தில் பெருமாள் உலா
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை சுந்தரராஜ பெருமாள் கோவில் பிரம்மோத்சவத்தில் இன்று கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா வந்தார்.
ஆர்.கே.பேட்டை பிராமணர் வீதியில் உள்ளது சுந்தராஜ பெருமாள் கோவில். இந்த கோவிலில் நடப்பு ஆண்டு பிரம்மோத்சவம் கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து அன்று மாலை 6:00 மணிக்கு உத்சவர் சுந்தரராஜ பெருமாள், ஹம்ச வாகனத்தில் வீதியுலா வந்தார். தொடர்ந்து தினசரி சிம்மம், சந்திர பிரபை, சூரிய பிரபை, அனுமந்த வாகனங்களில் எழுந்தருளிய சுவாமி, நேற்று கருட வாகனத்தில் எழுந்தருளினார். சிறப்பு மிக்க கருடசேவையில் பெருமாளை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் மாடவீதியில் திரண்டனர். இதையடுத்து, தேர் திருவிழா, 21ம் தேதி நடைபெற உள்ளது. மாலை 5:00 மணிக்கு ஸ்தபன திருமஞ்சனம் நடைபெறும். 22ம் குதிரை வாகன உத்சவத்துடன் சுந்தரராஜ பெருமாள் கோவில் பிரம்மோத்சவம் நிறைவு பெறுகிறது.