நெல்லிக்குப்பம் ஐயனார் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி
ADDED :1 hours ago
நெல்லிக்குப்பம்: ஐயனார் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி பூஜைகள் நடந்தன.
நெல்லிக்குப்பம் குடிதாங்கி சாவடி பூரணி பொற்கலை சமேத ஐயனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்களாக மண்டலாபி ஷேக பூஜைகள் நடந்து வந்தது. நேற்று மண்டலாபிஷேக பூர்த்தியை முன்னிட்டு 108 கலசங்களில் புனிதநீர் நிரப்பி யாகங்கள் செய்து ஐயனாரப்பனுக்கு கலசாபிஷேகம் நடந்து தீபாராதனை செய்தனர். பூரணி பொற்கலை சமேத ஐயனாரப்பனுக்கு திருக்கல்யாணம் செய்து பக்தர்களுக்கு கல்யாண விருந்து அளித்தனர்.வானவேடிக்கைகளுடன் சுவாமி வீதி உலா நடந்தது.