உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூர் வசந்த உத்ஸவம்: இன்று கஜேந்திர மோட்சம்

திருக்கோஷ்டியூர் வசந்த உத்ஸவம்: இன்று கஜேந்திர மோட்சம்

திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் வசந்த உற்ஸவ விழாவை முன்னிட்டு இன்று காலை கருவேல்குரிச்சி மணிமுத்தாற்றில் கஜேந்திர மோட்ச வைபவம் நடைபெறுகிறது.

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வசந்த உத்ஸவம் நான்கு நாட்கள் நடைபெறும். மே 29ல் கோயில் ஆண்டாள் சன்னதி அருகில் யாகசாலையில் கலசங்கள் பிரதிஷ்டை செய்து பட்டாச்சார்யர்களால் பூஜைகள் துவங்கி பெருமாளுக்கு காப்புக்கட்டி உத்ஸவம் துவங்கியது. நேற்று காலை 7:00 மணிக்கு  யாகசாலையில் அனுக்ைஞ பெற்று பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் ஆஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, கருவேல்குரிச்சி மணிமுத்தாறு மண்டபத்தில் எழுந்தருளினார்.பட்டாச்சார்யர்களால் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கருவேல்குரிச்சி மண்டகப்படி பூஜைகள், தீபராதனை நடந்தது.

இரவில்  சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று அலங்காரத்தில் எழுந்தருளி தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து பெருமாள் பத்தி உலாத்துதல் நடைபெறும். இன்று அதிகாலையில் கருடவாகனத்தில் பெருமாள் மண்டபத்திலிருந்து புறப்பாடாகி, மணிமுத்தாற்றில் இறங்கி சூரிய உதயத்தின் போது கஜேந்திர மோட்ச வைபவம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !