உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தண்ணாயிரமுடைய அய்யனார் கோவிலில் குதிரை எடுப்பு திருவிழா

தண்ணாயிரமுடைய அய்யனார் கோவிலில் குதிரை எடுப்பு திருவிழா

பழையனூர்; பழையனூர் அருகே ஓடாத்தூர் ஸ்ரீசிவசெண்பக தண்ணாயிரமுடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நேற்று முன்தினம் வெகு விமரிசையாக நடந்தது.

தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவி வரும் சூழலில் மழை வேண்டி கிராமங்கள் தோறும் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஓடாத்தூர் ஸ்ரீ சிவசெண்பக தண்ணாயிரமுடைய அய்யனார் கோயிலுக்கு புரவி எடுப்பு திருவிழா நடத்த தீர்மானிக்கப்பட்டு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. தினசரி அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று முன்தினம் மதியம் வேளார் தெருவில் இருந்து புரவி எடுப்பு திருவிழா தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் நேர்த்திகடன் விரதமிருந்து புரவிகளை சுமந்து வந்தனர். குழந்தை வரம் வேண்டி விரதமிருந்த பெண்கள் நேர்த்திகடன் பொம்மைகளை சுமந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர். புரவி எடுப்பு திருவிழா ஊர்வலத்தில் சிலம்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவைகள் நடந்தன. விழாவிற்கான ஏற்பாடுகளை ஓடாத்தூர் கிராம மக்கள் செய்திருந்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !