திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் திருஞானசம்பந்தர் குரு பூஜை விழா
ADDED :2 days ago
திருப்புவனம்; திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் - சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் திருஞானசம்பந்த பெருமானின் குருபூஜை விழா நேற்று முன்தினம் மாலை நடந்தது.
திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம் திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் ஆலயம், இங்கு திருஞானசம்பந்தருக்கு என தனி சன்னதி உண்டு, ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் இங்கு ஸ்ரீவேலப்ப தேசிகர் திருக்கூட்டம் சார்பில் குருபூஜை நடத்தப்படுவது வழக்கம், இந்தாண்டு குருபூஜை விழா நேற்று முன்தினம் மாலை ஆறு மணிக்கு நால்வர் சன்னதியில் அபிஷேக ஆராதனையுடன் தொடங்கியது. தொடர்ந்து திருமுறை விண்ணப்பம், பக்திசொற்பொழிவு முடிந்து தீபாராதனை காட்டப்பட்ட உடன் திருஞானசம்பந்தர் உற்ஷவப் புறப்பாடு நடந்தது. இரவு எட்டு மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவேலப்ப தேசிகர் திருக்கூட்டத்தினர் செய்திருந்தனர்.