செட்டிப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் தர்மர் பட்டாபிஷேகம்
ADDED :2 days ago
திருக்கனுார்: செட்டிப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவத்தின் நிறைவாக, தர்மர் பட்டாபிஷேகம் நேற்று நடந்தது.
திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் திரவுபதியம்மன், மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், தீமிதி உற்சவம் கடந்த 22ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் இரவு சிறப்பு மின் அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வாக, கடந்த 2ம் தேதி தீமிதி உற்சவம் நடந்தது. உற்சவத்தின் நிறைவாக, தர்மர் பட்டாபிஷேகம் நேற்று நடந்தது. திரளான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.