தேய்பிறை சஷ்டி; முருகனை வழிபட துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு கிடைக்கும்!
தேய்பிறை சஷ்டி என்பது முருகப்பெருமானை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாளாகும். சந்திரனின் சுழற்சியின் அடிப்படையில், பௌர்ணமிக்கு அடுத்து வரும் ஆறாவது திதியை தேய்பிறை சஷ்டி என்று அழைக்கிறோம். இந்த ஆறாவது திதி ஆறுமுகனுக்கு உரிய திதியாகும். குழந்தை பாக்கியம்: "சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்ற பழமொழிக்கு ஏற்ப, குழந்தை வரம் வேண்டுபவர்கள் இந்த நாளில் விரதம் இருப்பது மிகுந்த பலன் தரும். கஷ்டங்கள் நீங்க: தீராத பிரச்சனைகள், கடன் தொல்லை, எதிரிகளின் தொல்லை, திருமணத் தடைகள் மற்றும் நீண்ட நாள் நோய்களால் அவதிப்படுபவர்கள் இந்த நாளில் விரதம் இருந்து முருகனை வேண்டினால் துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. சஷ்டி விரதமிருப்பவர்களுக்கு மனக்குழப்பங்கள் நீங்கி, தெளிவும், குடும்பத்தில் அமைதியும் நிலவும். இன்று வீட்டில் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வோம்.. கந்தன் அருள் பெறுவோம்!