உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவிலில் பஞ்சாரி மேள அரங்கேற்றம் விமரிசை

மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவிலில் பஞ்சாரி மேள அரங்கேற்றம் விமரிசை

சென்னை: சென்னை மகாலிங்கபுரம் ஸ்ரீ அய்யப்பன், குருவாயூரப்பன் கோவிலில், ஸ்ரீ அய்யப்ப பக்த சபை வாத்ய வித்யாலயாவின், 9வது குழு சார்பில், பஞ்சாரிமேள அரங்கேற்றம் நேற்று முன்தினம் நடந்தது.

இந்த குழுவில், மூன்று பெண்கள் உட்பட 13 பேர் பஞ்சாரி மேளம் வாசித்து, அரங்கேற்றம் செய்தனர். இந்த அரங்கேற்றத்திற்கு, கேரளத்தில் இருந்து, 75க்கும் மேற்பட்ட பஞ்சாரி வாத்ய கலைஞர்கள் பங்கேற்றனர். கோவிலிலேயே இதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வாத்ய வித்யாலயா பயிற்சியாளர் கோபி கூறுகையில், ‘‘பஞ்சாரி மேளம் சார்ந்த இரண்டு ஆண்டு படிப்பை முடித்த பிறகே, அரங்கேற்றம் செய்ய முடியும்.

‘‘இதுவரை இந்த வாத்ய வித்யாலயாவில், 300க்கும் மேற்பட்டோர், பஞ்சாரி மேளம், செண்டமேளம், சம்பர மேளம், பஞ்ச வாத்யம் ஆகியவற்றில் பயிற்சி பெற்று, அரங்கேற்றம் செய்துள்ளனர்,’’ என்றார்.

இதில், கேரளத்தில் பிரசித்தி பெற்ற, மட்டனுர் சங்கரன் குட்டி மாறார் மற்றும் அவரது மகன்கள் ஸ்ரீராஜ், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட, 75 வாத்ய கலைஞர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !