கோவை சிவாலயங்களில் நடராஜபெருமானுக்கு ஆனி திருமஞ்சன அபிஷேகம்
கோவை ; வருடம் தோறும் தமிழ் ஆனிமாதம் உத்திரம் நட்சத்திரத்தில் நடராஜ பெருமானுக்கு திருமஞ்சன அபிஷேகம் நடைபெறும் 2026 ம் ஆண்டு உத்திரம் நட்சத்திரத்தில் கோவையில் உள்ள சிவாலயங்களில் இருக்கும் நடராஜபெருமானுக்கு திருமஞ்சன அபிஷேகம் நடந்தது மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் குருந்த மரத்து நிழலில் உபதேசம் செய்து முக்தி அளித்த திருநாளே ஆனி மாத உத்திர நட்சத்திரம் ஆகும் இந்த நாளில் சிவனின் அவதாரமான நடராஜர் பெருமானையும் சிவகாமி தாயாரையும் தரிசித்தால் வாழ்க்கையில் மன அமைதி மற்றும் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்
இந் நாளில் சிவபெருமானையும் வழிபடுவதும் உகந்ததாகும் திருமஞ்சனம் என்ற பொருளுக்கு புனிதமான அபிஷேகம் என்று பொருளாகும் நடராஜ பெருமானுக்கு ஒரு வருடத்தில் ஆறு முறை அபிஷேகம் நடைபெறும் இதில் ஆனி மாதம் உத்திர நட்சத்திரம் மற்றும் மார்கழி மாதத்தில் திருவாதிரை நாள் ஆகிய நாட்களில் நடைபெறும் இந்த நிகழ்வு மிகவும் முக்கியமானதாகும் இதையொட்டி கோவை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் இருக்கும் நடராஜபெருமானுக்கும் சிவகாமி தாயாருக்கும் சிறப்பு பூஜை அபிஷேகம் நடந்தது இதில் கோவை உக்கடம் சுண்டக்காமுத்தூர் பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள சுயம்பு ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் மூலவர் மற்றும் உற்சவமூர்த்தி களுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் மற்றும் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும் நடந்தது திருக்கல்யாணத்தில் ஜலகண்டேஸ்வரருக்கும் சங்கர நாயகி தாயாருக்கும் திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது இதில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த சுவாமிகள் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.