உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சியில் சத்ய சாய் பாபா நூற்றாண்டு விழா ரத ஊர்வலம்

செஞ்சியில் சத்ய சாய் பாபா நூற்றாண்டு விழா ரத ஊர்வலம்

செஞ்சி; செஞ்சியில் சத்யசாய் பாபா ரத ஊர்வலம் நடந்தது.

சத்திய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் அவரின் திருஉருவ படத்துடன் ரத ஊர்வலம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக செஞ்சி பகுதியில் 3 நாள் ரத உற்வலம் நடந்தது. முதல் நாள் கணக்கன் குப்பம், தேவதானம்பேட்டை, ஆலம்பூண்டி, நடுப்பட்டு ஆகிய கிராமங்களிலும், 2ம் நாள் செவலபுரை, மேலச்சேரி, சிங்கவரம் ,செஞ்சி நகரம், ஊரணி தாங்கல் கிராமத்திலும், 3ம் நாள் பொன்பத்தி, அஞ்சாஞ்சேரி, மேல் எடையாளம், குறிஞ்சிப்பை, தையூர் மோடையூர், தீவனூர் ஆகிய கிராமங்களிலும் ரத ஊர்வலம் நடந்தது. கிராமங்களில் தீபாராதனை ஏற்றி, மங்கள வாத்தியம் இசைத்து பக்தர்கள் வரவேற்றனர். செஞ்சி கோட்டை சிலம்பம் குழு மாணவர்களின் சாதனையும், பனமலை பேட்டை கைலாய வாத்திய குழுவினரின் கைலாய வாத்திய இசையும் நடந்தது. முன்னாள் அமைச்சர் மஸ்தான் மற்றும் திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார். ஒருங்கிணைப்பாளர்கள் சர்தார் சிங், செந்தில்குமார், ஏழுமலை, சர்வேசன் சுரேஷ் ஆனந்த் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !