உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மந்தை பிடாரியம்மன், சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா

மந்தை பிடாரியம்மன், சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா

இளையான்குடி; இளையான்குடி அருகே தெற்கு வண்டலில் செல்வ விநாயகர், மந்தை பிடாரியம்மன், சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இளையான்குடி ஒன்றியத்திற்குட்பட்ட தெற்கு வண்டல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு செல்வ விநாயகர், மந்தை பிடாரியம்மன் மற்றும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்களின் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த கடந்த 2 நாட்களாக முன்பு யாகசாலை பூஜைகள், கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, முதல் மற்றும் இரண்டாம் கால யாக பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நேற்று அதிகாலை முதலே வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து யாகசாலைகளில் பூஜிக்கப்பட்ட கலசங்களில் இருந்து சிவாச்சாரியார்கள் புனித நீரை எடுத்துச் சென்று கோயில் விமானங்கள் மற்றும் ராஜகோபுர கலசங்களுக்கு ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தினர்.பின்னர் மூலவர்களுக்கு மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி அன்னதானம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.சிறப்பாக செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !