புலிகுன்றம் லட்சுமி நாராயணர் ஜேஷ்டா அபிஷேக உத்சவம்
ADDED :8 minutes ago
திருக்கழுக்குன்றம்; புலிகுன்றம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், ஜேஷ்டா அபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது. திருக்கழுக்குன்றம் அடுத்த, புலிகுன்றத்தில் பிரசித்தி பெற்ற, லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. சுவாமி கற்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நட்சத்திர நாளில், ஆண்டுதோறும் ஜேஷ்டா எனப்படும் அபிஷேகம் நடத்தப்படும். இத்தகைய அபிஷேகம், நேற்று விமரிசையாக நடந்தது. பால், தயிர், தேன், இளநீர், பிற மூலிகை திரவியங்கள் ஆகியவை நிரப்பப்பட்ட, 81 கலசங்களுடன் யாக பூஜைகள் நடந்தன. காலை 11:00 மணி முதல் 12:30 மணி வரை, மூலவர், உற்சவர் ஆகியோருக்கு அபிஷேக திருமஞ்சனம் நடந்தது.