உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனி பிரதோஷம், அமாவாசை; சதுரகிரி செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி

ஆனி பிரதோஷம், அமாவாசை; சதுரகிரி செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி

விருதுநகர்; ஆனி மாத பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல ஜூலை 12ம் தேதி முதல் ஜூலை15ம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.


பூலோக கயிலை என பக்தர்களால் கருதி போற்றப்படும் சதுரகிரி மலை தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் மலைவாச சிவஸ்தலமாக, தமிழகத்தில் அதிக உயரத்தில் அமைந்துள்ள ஆன்மிக ஸ்தலமாக விளங்கி வருகிறது. புராணகாலங்களில் வாழ்ந்த பிரசித்தி பெற்ற சித்தர்கள் பலர் வாழ்ந்து அடைக்கலமான மலை என்பதால் சித்தர்மலை என்றும், பல்வேறு மூலிகைகள் நிறைந்த புனித மலை என்பதால் மேகசஞ்சீவி மலை எனவும் பக்தர்களால் போற்றப்படுகிறது. புனித மலையாகவும் கருதப்படுகிறது. இது ஆன்மிக ஸ்தலம் என்பதை தவிர தமிழகத்தில் அதிக மூலிகைகளை உள்ளடக்கிய முதல் மூலிகை வனமாகவும், சாம்பல்நிற அணில் சரணாலயம் என்ற மற்ற இரு வேறு வகைகளிலும் பிரசித்தி பெற்றது. சிறப்பு மிக்க இத்தலத்தில் ஆனி அமாவாசையை முன்னிட்டு வரும் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்ய வனத்துறை, கோவில் நிர்வாகம், அனுமதி அளித்துள்ளது. பக்தர்கள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !