உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளைவயல் காளி கோயில் பூச்சொரிதல் விழா; பக்தர்கள் தரிசனம்

பிள்ளைவயல் காளி கோயில் பூச்சொரிதல் விழா; பக்தர்கள் தரிசனம்

சிவகங்கை: சிவகங்கை பிள்ளை வயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


ஹிந்து அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் ஜூலை 3ல் காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் பூச் சொரிதல் விழா துவங்கியது. தினமும் மாலை அம் மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஜூலை 8 அன்று ஏகதின லட்சார்ச்சனை, அம்மன் திருவீதி உலா நடந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு பால், நெய் உட்பட சகல திரவிய அபிஷேகம் நடந்தது. சந்தன காப்பு அலங்காரத்தில் கையில் குழந்தையுடன் பிள்ளைவயல் காளி எழுந்தருளினார். நேற்று காலை முதல் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.


பெண்கள் நகரில் உள்ள முக்கிய கோயில்களில் இருந்து பூத்தட்டுக்களை ஏந்தி ஊர்வலமாக பிள்ளை வயல் காளி கோயில் வந்து அம்மனுக்கு பூச்சொரிந்து வழிபட்டனர். நகரின் அனைத்து கோயில் களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. விழாவை முன்னிட்டு சிவகங்கை டி.எஸ்.பி., அமல அட்வின் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவில் ஆப்டெக் கம்ப்யூட்டர் மைய உரிமை யாளர் நித்யா கண்ணப்பன், வேல்யூ ஆட்டோஸ் உரிமையாளர் சுந்தர், அன்னபூரணி ஓட்டல் உரிமையாளர் லட்சுமணன், ஆரியபவன் ஓட்டல் உரிமையாளர் கருப்பையா, ரகுபாஸ்கர், மார்டன் ரைஸ்மில் உரிமையாளர் சண்முகநாதன், வழக்கறி ஞர்கள் ராம்பிரபாகர், அசோக் மேத்தா, சவுந்திரராஜன், அனிதா ராஜ், பார்த்திபன், ஸ்டாம்பு வெண்டர் சுந்தரபாண்டியன், பத்திர எழுத்தர் சுரேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !