குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஆடிப் பெருந்திருவிழா; ஜூலை 18ல் துவக்கம்
சின்னமனூர்: குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஆடித் திரு விழா நாளை மறுநாள் ஜூலை 18 ல் துவங்குகிறது. திருப்பணிகள் நடந்து வருவதால் கொடியேற்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தேனி மாவட்டம் குச்சனூரில் சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. தமிழகத்தில் சனீஸ்வர பகவானுக் சென்று தனிக் கோயில் வேறு எங்கும் இல்லை. சுயம்புவாக தோன்றிய இந்த கோயில் சுரபி நதி கரையில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது தனிச் சிறப்பாகும். ஆண்டுதோறும் ஆடி மாதம் பெருந் திருவிழா நடைபெறும். ஆடி மாதம் நான்கு சனிக்கிழமைகளில் நடைபெறும் திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் திரளாக பங்கேற்பார்கள். கோயிலில் திருப்பணி வேலைகள் நடப்பதால் கொடி மரம் அகற்றப்பட்டுள்ளது. எனவே அறநிலைய துறை திருவிழாவை கடந்த 2 ஆண்டுகளாக ரத்து செய்துள்ளது. ஐகோர்ட் உத்தரவுப்படி திருக்கல்யாணம் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆடி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையிலும் திருவிழா நடைபெறும். சனிக்கிழமைகளிக் அதிகாலை 4 மணியிலிருந்து பக்தர்கள் கூட்டம் வரத் துவங்கும். வழக்கமாக பக்தர்கள் , சுரபி நதியில் குளித்து, காக்கை வாகனம் வாங்கி விடுவது, எள்ளு, பொரி போன்றவற்றை படைப்பது உள்ளிட்ட நேர்த்தி கடன்களை செய்வார்கள். குறிப்பாக நான்காவது சனிக்கிழமை பெருந்திரு விழாவாக கொண்டாடப்படும், அன்று லட்சக்கணக்கில் மக்கள் கூடுவார்கள். கடந்த 2 ஆண்டுகளாக ரத்து செய்யப்பட்டுள்ள திருவிழா இந்தாண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் மலர் அலங்காரத்தில் சுவாமி சனீஸ்வர பகவான் அருள் பாலிப்பார். நீண்ட வரிசையில் நின்று பத்தர்கள் தரிசனம் செய்வார்கள்.