உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூரில் வெள்ளை யானையாக தெய்வானை வீதி உலா

திருச்செந்தூரில் வெள்ளை யானையாக தெய்வானை வீதி உலா

திருச்செந்தூர், ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோவில் யானை தெய்வானை வெள்ளை யானை அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தது.


சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திருக்கைலாயத்தில் சிவபெருமான் ஐராவதம் என்ற வெள்ளை யானை வடிவில் காட்சி அளித்ததை நினைவுகூரும் வகையில், தெய்வானை யானையின் உடல் முழுவதும் அரிசி மாவு, திருநீறு பூசப்பட்டு வெள்ளை யானையாக அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து, தங்க சப்பரத்தில் எழுந்தருளிய சுந்தரமூர்த்தி நாயனாருக்கு முன்பாக தெய்வானை யானை சன்னதி தெரு மற்றும் எட்டு ரதவீதிகளில் வீதி உலா வந்தது. பின்னர் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் ஆகியோர் பல்லக்குகளில் உள்பிரகாரத்தில் உலா வந்தனர். தொடர்ந்து ஜெயந்திநாதர் சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !