உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னூர் ராக்கியண்ண சாமி கோவிலில் பொங்கல் திருவிழா

அன்னூர் ராக்கியண்ண சாமி கோவிலில் பொங்கல் திருவிழா

அன்னூர்: கரியாம்பாளையம் ராக்கியண்ண சாமி கோவிலில் நேற்று பொங்கல் விழா நடைபெற்றது.


கரியாம்பாளையத்தில் உள்ள பழமையான ராக்கியண்ணசாமி கோவிலில் 56வது ஆண்டு பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. காலை 8:30 மணிக்கு பொங்கல் வைக்கப்பட்டது. ராக்கியண்ணசாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கார பூஜை நடந்தது. தீபாராதனை நடந்தது. பக்தர்கள் சிவன் சக்தி பூங்கரகம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். கோவிலில் கரகங்களை சமர்ப்பித்தனர். இதை அடுத்து அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சிவன் சக்தி கரகங்கள் நீர் நிலைகளில் இடப்பட்டன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !