உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பசுபதீஸ்வரர் கோவில் திருப்பணியின் போது பழங்கால கிணறு கண்டுபிடிப்பு

பசுபதீஸ்வரர் கோவில் திருப்பணியின் போது பழங்கால கிணறு கண்டுபிடிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கோவில் திருப்பணியின் போது பழங்கால ஆழ்கிணறு கண்டுபிடிக்கப்பட்டது.


விழுப்புரம் அடுத்த பஞ்சமாதேவி கிராமத்தில் பழமையான பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலை புதுப்பிக்கும் விதமாக, கிராம மக்கள் சார்பில், நிர்வாக குழு அமைத்து, திருப்பணி மேற்கொண்டு புதிய மண்டபம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன், கோவில் முன் பகுதியில் ஒரு டன் அளவிலான நந்திகேஸ்வரர் சிலை வைப்பதற்காக பணிகள் நடந்தது. அதற்காக ஜே.சி.பி., மூலம் பள்ளம் தோண்டியபோது, அந்த இடத்தில் பழங்கால கிணறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கிணறு 3 மீட்டர் சுற்றளவில், 6 அடி ஆழத்திற்கு இருந்தது. இதனால், அந்த இடத்தில் நந்தி சிலை நிறுவும் பணியை தற்காலிகமாக நிறுத்திய கோவில் நிர்வாகத்தினர், கிணறு இருந்ததன் காரணம் குறித்து, ஆழமாக தோண்டி பார்த்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த கிணறை சுற்றுப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். கிணற்றை மூடிவிட்டு நந்தி சிலை அமைப்பதா அல்லது அருகில் மாற்றி அமைப்பதா என்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !