கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு அபிஷேகம்
ADDED :3 minutes ago
கோவை; ஆடி பௌர்ணமி தினம் மற்றும் வியாச பூர்ணிமா தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது.
பௌர்ணமி அன்று சிவபெருமானை தரிசிப்பது என்பது மிக முக்கியமான நிகழ்வில் ஒன்றாகும் இதையொட்டி மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. மூலவர் சந்தன காப்பு அலங்காரத்துடன் தீப ஒளியில் ஜொலித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமியை வழிபட்டனர்.