உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புல்லாணி கிராமங்களில் முளைக்கொட்டு உற்ஸவம்

திருப்புல்லாணி கிராமங்களில் முளைக்கொட்டு உற்ஸவம்

திருப்புல்லாணி,: திருப்புல்லாணி அருகே தினைக்குளம் ஊராட்சிக்குட்பட்ட மொத்தி வலசை மேற்கில் முளைக்கொட்டு உற்ஸவம் நடந்தது


கடந்த பத்து நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுகளுடன் விழா துவங்கியது. நாள்தோறும் கோயில் முன்பாக வளாகத்தில் கும்மியாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று முன்தினம் மூலவர் முத்துமாரியம்மனுக்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. இன்று காலை அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. ஏராளமான பெண்கள் பொங்கலிட்டனர். பகலில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் அம்மன் சக்தி கரகம் முன்னே செல்ல ஊர்வலம் நடந்தது. விழா ஏற்பாடுகளை மொத்தி வலசை மேற்கு கிராம மக்கள் செய்திருந்தனர்.


பெரியபட்டினம் அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள காந்தாரி அம்மன் கோயிலில் பூக்குழி உற்ஸவ விழா நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பகலில் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் கலை நிகழ்ச்சி நடந்தது. ரெகுநாதபுரம் கீழவலசை முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்சவத்தை முன்னிட்டு நேற்று மாலை பாரி ஊர்வலம் நடந்தது. ரெகுநாதபுரம் அருகே நைனாமரைக்கான் முத்து மாரியம்மன் கோயிலில் நடந்த முளைப்பாரி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !