செல்வ விநாயகர் கோயிலில் 41வது ஆண்டு லட்சார்ச்சனை விழா
ADDED :13 hours ago
திண்டுக்கல்: திண்டுக்கல் சத்திரம் தெரு செல்வ விநாயகர் கோயிலில் 41வது ஆண்டு லட்சார்ச்சனை விழா இரு நாட்கள் நடக்கிறது.
நேற்று காலை 6:30 மணிக்கு சுவாமிக்கு பால், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. காலை 7:30 மணிக்கு லட்சார்ச்சனை பூஜை, பகல் 11:30 மணிக்கு தீபாராதனை, மாலை 4:00 மணிக்கு லட்சார்ச்சனை பூஜை நடந்தது.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இரண்டாவது நாளாக இன்றும் (ஆக.,9) லட்சார்ச்சனை பூஜை நடக்கிறது.