பொன்னியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா
ADDED :2 days ago
திண்டிவனம்: திண்டிவனம் திருவள்ளூர் நகர் ஏரிக்கரை பொன்னியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா நடந்தது.
இதையொட்டி, மூலவர் ஏரிக்கரை பொன்னியம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் ஏரிக்கரை பொன்னியம்மன் ரிஷப வாகனத்தில் இரவு வீதியுலா நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் திருவள்ளூர் நகர் பொதுமக்கள் செய்திருந்தனர்.