கூப்பிடு விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா; விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :17 hours ago
கோவை : ஆடி மாதம் சதுர்த்தி திதியை முன்னிட்டு கோவை இடையர் வீதி ஸ்ரீ கூப்பிடு விநாயகர் கோவிலில் மூலவர் விநாயக பெருமானுக்கு அபிஷேகம் பூஜை நடந்தது இதில் பால் தயிர் பன்னீர் சந்தனம் இளநீர் வெண்ணை மற்றும் பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர். நிறைவாக பக்தர்களுக்கு சாதம் வழங்கப்பட்டது.