உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழா ஆக.,14ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் பல்வேறு கிராமத்தாரின் மண்டகப்படி நிகழ்வுகளாக சக்தி கரகம், தர்மர் பிறப்பு, கிருஷ்ணர் பிறப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு சிலுகவயல் கிராமத்தார்களின் மண்டகப்படி நிகழ்வாக திரவுபதி தர்மர் திருக்கல்யாணம் நடந்தது.


கலந்து கொண்ட பெண்கள், அட்சதை துாவி அம்மன் ஆசி பெற்றனர். திரவுபதி தர்மர் திருமணக் கோலத்தில் கிருஷ்ண பகவானுடன் கருட வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். முன்னதாக சுவாமிக்கு நடந்த சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு மொய் விருந்து வழங்கப்பட்டது. *ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி விழா செப்.,4 ல் நடக்கிறது. தினமும் பல்வேறு மண்டகப்படி நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக சிலுகவயல் கிராமத்தாரின் மண்டகப்படி நிகழ்வாக இளைஞர்களின் பீமன் வேட நிகழ்வு நடந்தது. முன்னதாக திரவுபதி அம்மன் கோயிலில் இருந்து இளைஞர்கள் உடலில் வர்ணம் பூசியும், வேப்ப இலைகளை உடலில் கட்டிக் கொண்டும் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து திரவுபதி வாழ்க்கை வரலாறை எடுத்துரைத்தனர். மாலையில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !