உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் மழையால் உடைந்தது துவாரபாலகர் சிலை

 தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் மழையால் உடைந்தது துவாரபாலகர் சிலை

தாரமங்கலம்: சேலம் மாவட்டம், தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் புனரமைக்கப்பட்டு, 2018 ஏப்., 22ல் கும்பாபிஷேகம் நடந்தது. அக்கோவிலுக்கு வெளிநாடுகள், மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள், சிற்பக்கலையின் அழகை பார்த்து ஆச்சரியப்பட்டு செல்கின்றனர். அக்கோவில் கோபுரம், 90 அடி உயரம், 5 நிலையில் உள்ளது. கோவில் உட்புறம், ராஜகோபுர இரண்டாம் நிலை இருபுறமும் துவார பாலகர்கள் சிலை இருந்தன. அதில் வலது புறம் உள்ள துவார பாலகர் சிலையின் தலை மட்டும் சில நாட்களுக்கு முன் உடைந்து விழுந்தது. இது சமூக வலைதளத்திலும் பரவியது. இதுகுறித்து செயல் அலுவலர் ஜீவானந்தம் கூறுகையில், ‘‘துவாரபாலகர் சிலை, மழையால் சேதமடைந்தது. தொல்லியல் துறையினர், அந்த இடத்தை பார்வையிட்டு சென்றனர். அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !