காணை வைலாமூர் கிராம விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
ADDED :3 days ago
விழுப்புரம்: காணை வைலாமூர் கிராம குளக்கரையில் உள்ள விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி, கோவிலில் கடந்த 12ம் தேதி மகா கணபதி ஹோமம், முதல் கால யாகசாலை பூஜை, மகா லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, இரண்டாம் கால யாகசாலை பூஜை, வாஸ்து சாந்தி, புண்யாகவாசனம், கலச ஸ்தாபனம் நடந்தது. நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு மூன்றாம் காலயாகசாலை பூஜை, கோ பூஜை, மண்டபார்ச்சனை, மகா மந்திர ஹோமங்கள் நடந்தது. தொடர்ந்து 9.30 மணிக்கு விநாயகர் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழாக் குழுவினர் ஆதிசேஷன், வள்ளி மற்றும் கிராம மக்கள் செய்தனர்.