உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரும்பாக்கத்தில் 32 அடி உயர முருகன் சிலைக்கு மகா கும்பாபிஷேகம்

பெரும்பாக்கத்தில் 32 அடி உயர முருகன் சிலைக்கு மகா கும்பாபிஷேகம்

உளுந்தூர்பேட்டை: பெரும்பாக்கத்தில் 32 அடி உயர முருகன் சிலைக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.


உளுந்தூர்பேட்டை தாலுகா பெரும்பாக்கம் கிராமத்தில் 32 அடி உயர முருகன் சிலைக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளும், கோ மாதா பூஜை, கணபதி பூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. நேற்று இரண்டாம் கால மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடந்தது. நான்காம் கால யாக சாலை பூஜைகளுடன் கடம் புறப்பாடு நடந்தது. பின்னர் புனித நீர் கொண்டு வரப்பட்டு முருகனின் தலைக் கலசத்தின் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது . இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !