உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி முகூர்த்த கால் நடுதல்

சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி முகூர்த்த கால் நடுதல்

சிவகங்கை: சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி வார விழாவை முன்னிட்டு நேற்று முகூர்த்த கால் நடப்பட்டது.


ஹிந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனியன்றும் சீதேவி, பூதேவி சுந்தரராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம், சிறப்பு அபிேஷக ஆராதனை மண்டகப்படிதாரர்கள் சார்பில் நடைபெறும். செப்., 18 அன்று புரட்டாசி பிறக்கிறது. சனிவார விழாவிற்காக நேற்று கோயில் முன் முகூர்த்தக்கால் நடப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. விழாவில் அனைத்து மண்டகப்படியை சார்ந்த நிர்வாகிகளும், பக்தர்களும் பங்கேற்றனர். முதல் சனி வாரமான (செப்.,19) அன்று சிவகங்கை பிராமண மகாஜனங்கள் சார்பில் சிறப்பு பூஜை, சுவாமி புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து ஒவ்வொரு சனி தோறும் நாயுடு மகாஜன சங்கம், 24 மனை தெலுங்கு செட்டியார், யாதவர், முக்குலத்தோர் மண்டகப்படிதாரர்கள் சார்பில் புரட்டாசி சனி வார விழா நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !