ஒரே இடத்தில் 11 பெருமாள் கருடசேவை: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
மயிலாடுதுறை: திருநாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் நேற்று இரவு நடந் த கருட சேவை உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு 11 பெருமாளையும், திருமங்கையாழ்வாரை சேவித்தனர். நாகை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள திருநாங்கூரில் 11 திவ்ய தேச கோவில்கள் உள்ளன. இக்கோவில்களிலிருந்து ஆண்டு தோறும் தை அம்மாவாசைக்கு மறுநாள் பெருமாள் புறப்பட்டு நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் எழுந்தருள கருடசேவை உற்சவம் நடைபெறும். இவ்வாண்டு தை அம்மாவாசை இரு நாட்கள் இருந்ததால் நேற்று இரவு கருடசேவை உற்சவம் நடைபெற்றது. இதை யொட்டி இரு தினங்களுக்கு முன்பு திருநகரியிலிலுந்து திருமங்கையாழ்வார் புறப்பட்டு 11 பெருமாளையும் கருடசேவைக்கு வரவேற்று விட்டு நேற்று காலை நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலுக்கு வந்தார். தொடர்ந்து மதியம் திருநாங்கூர் ஸ்ரீ நாராயணபெருமாள், ஸ்ரீ குடமாடு கூத்த ர், ஸ்ரீ செம்பொன்னரங்கர், ஸ்ரீ பள்ளி கொண்ட பெருமாள், ஸ்ரீ புரு÷ஷாத்தம ன், ஸ்ரீ வைகுந்த நாதர், திருக்காவாளம்பாடி ஸ்ரீ கோபாலன், திருமணிகூடம் ஸ்ரீ வரதராஜபெருமாள், கீழச்சாலை ஸ்ரீமாதவ பெருமாள், திருபார்த்தம்பள் ளி ஸ்ரீ பார்த்தசாரதி, அண்ணன் கோவில் ஸ்ரீ அண்ணன் பெருமாள் ஆகிய 11 பெருமாள்கள், தாயாருடன் திருநாங்கூர் ஸ்ரீ நாராயணபெருமாள் கோவிலுக்கு வந்தனர். அவர்களை கோவில் வாசலில் திருமங்கையாழ்வார் வரவேற்கு ம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கோவில் மண்டபத்தில் 11 பெருமாள்களும் எழுந்தருள அவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவு 12 மணிக்கு பெருமாள்கள் தங்க கருடவாகனத்தில் கோவில் வாசளில் எழுந்தருள திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 1 மணிக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டது.
இதில் தமிழ்நாடு மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் 11 பெருமாள்களையும் ஒரே இடத்தில் சேவித்தனர். பின்னர் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. கருடசேவை உற்சவத்தில் நாகை மாவட்ட கலெக்டர் முனுசாமி, எஸ்.பி ரா மகிருஷ்ணன், எம்.எல்.ஏ கள் பவுன்ராஜ், சக்தி, மாவட்ட குழு தலைவர் சந் திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டார். விழாவையொட்டி சீர்காழி டி.எஸ்.பி. பாலகுரு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் மேற்கொண்டனர். தீயனைப்பு மீட்பு படை யினர் கண்கானிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சீர்காழி, மயிலாடுதுறையி லிருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.