உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூன்றாம் பத்து!

மூன்றாம் பத்து!

பதிற்றுப்பத்து - 21. நாடு காத்தற் சிறப்புக் கூறி, மன்னனை வாழ்த்துதல் துறை : செந்துறைப் பாடாண் பாட்டுவண்ணம் : ஒழுகு வண்ணம்தூக்கு : செந்தூக்குபெயர் : அடு நெய் ஆவுதி சொல், பெயர், நாட்டம், கேள்வி, நெஞ்சம், என்றுஐந்துடன் போற்றி அவை துணையாக,எவ்வம் சூழாது விளங்கிய கொள்கை,காலை அன்ன சீர் சால் வாய்மொழி,உரு கெழு மரபின் கடவுட் பேணியர்,  5கொண்ட தீயின் சுடர் எழுதோறும்விரும்பு மெய் பரந்த பெரு பெயர் ஆவுதி;வருநர் வரையார் வார வேண்டி,விருந்து கண்மாறாது உணீஇய, பாசவர்ஊனத்து அழித்த வால் நிணக் கொழுங் குறை  10குய் இடுதோறும் ஆனாது ஆர்ப்ப,கடல் ஒலி கொண்டு, செழு நகர் வரைப்பின்நடுவண் எழுந்த அடு நெய் ஆவுதி;இரண்டுடன் கமழும் நாற்றமொடு, வானத்துநிலைபெறு கடவுளும் விழைதகப் பேணி,  15ஆர் வளம் பழுனிய ஐயம் தீர் சிறப்பின்,மாரிஅம் கள்ளின், போர் வல் யானை,போர்ப்பு உறு முரசம் கறங்க, ஆர்ப்புச் சிறந்து,நன் கலம் தரூஉம் மண் படு மார்ப!முல்லைக் கண்ணிப் பல் ஆன் கோவலர்  20புல்லுடை வியன் புலம் பல் ஆ பரப்பி,கல் உயர் கடத்திடைக் கதிர் மணி பெறூஉம்,மிதி அல் செருப்பின் பூழியர் கோவே!குவியல் கண்ணி மழவர் மெய்ம்மறை!பல் பயம் தழீஇய, பயம் கெழு நெடுங் கோட்டு,  25நீர் அறல் மருங்கு வழிப்படா, பாகுடிப்பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சா,சீருடைத் தேஎத்த முனைகெட விலங்கிய,நேர் உயர் நெடு வரை அயிரைப் பொருந!யாண்டு பிழைப்பு அறியாது, பய மழை சுரந்து  30நோய் இல் மாந்தர்க்கு ஊழி ஆக!மண்ணா வாயின் மணம் கமழ் கொண்டு,கார் மலர் கமழும் தாழ் இருங் கூந்தல்,ஒரீஇயின போல இரவு மலர் நின்றுதிருமுகத்து அலமரும் பெரு மதர் மழைக்கண்,  35அலங்கிய காந்தள் இலங்கு நீர் அழுவத்துவேய் உறழ் பணைத் தோள், இவளோடுஆயிரம் வெள்ளம் வாழிய பலவே! பதிற்றுப்பத்து - 22. வென்றிச் சிறப்பு துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டுவண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்பெயர் : கயிறு குறு முகவை சினனே, காமம், கழி கண்ணோட்டம்,அச்சம், பொய்ச் சொல், அன்பு மிக உடைமை,தெறல் கடுமையொடு, பிறவும், இவ் உலகத்துஅறம் தெரி திகிரிக்கு வழியடை ஆகும்:தீது சேண் இகந்து, நன்று மிகப் புரிந்து,  5கடலும் கானமும் பல பயம் உதவ;பிறர் பிறர் நலியாது, வேற்றுப் பொருள் வெஃகாது,மை இல் அறிவினர் செவ்விதின் நடந்து, தம்அமர்துணைப் பிரியாது, பாத்து உண்டு, மாக்கள்மூத்த யாக்கையொடு பிணி இன்று கழிய;  10ஊழி உய்த்த உரவோர் உம்பல்!பொன் செய் கணிச்சித் திண் பிணி உடைத்துச்சிரறு சில ஊறிய நீர் வாய்ப் பத்தல்,கயிறு குறு முகவை மூயின மொய்க்கும்ஆ கெழு கொங்கர் நாடு அகப்படுத்த,  15வேல் கெழு தானை, வெருவரு தோன்றல்!உளைப் பொலிந்த மா,இழைப் பொலிந்த களிறு,வம்பு பரந்த தேர்,அமர்க்கு எதிர்ந்த புகல் மறவரொடு,  20துஞ்சுமரம் துவன்றிய, மலர் அகன் பறந்தலை,ஓங்கு நிலை வாயில் தூங்குபு தகைத்தவில் விசை மாட்டிய விழுச் சீர் ஐயவி,கடி மிளைக் குண்டு கிடங்கின்,நெடு மதில் நிரைப் பதணத்து,  25அண்ணல்அம் பெருங் கோட்டு அகப்பா எறிந்த,பொன் புனை உழிஞை வெல் போர்க் குட்டுவ!போர்த்து எறிந்த பறையால் புனல் செறுக்குநரும்,நீர்த்தரு பூசலின் அம்பு அழிக்குநரும்,ஒலித் தலை விழவின் மலியும் யாணர்  30நாடு கெழு தண் பணை சீறினை ஆதலின்,குட திசை மாய்ந்து, குண முதல் தோன்றி,பாய் இருள் அகற்றும், பயம் கெழு பண்பின்,ஞாயிறு கோடா நன் பகல் அமையத்து,கவலை வெண் நரி கூஉம் முறை பயிற்றி,  35கழல்கண் கூகைக் குழறு குரற் பாணிக்கருங் கட் பேய்மகள் வழங்கும்பெரும் பாழ் ஆகும்மன்; அளிய, தாமே! பதிற்றுப்பத்து - 23. வென்றிச் சிறப்பு துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டுவண்ணம் : ஒழுகு வண்ணம்தூக்கு : செந்தூக்குபெயர் : ததைந்த காஞ்சி அலந்தலை உன்னத்து அம் கவடு பொருந்திச்சிதடி கரைய, பெரு வறம் கூர்ந்து,நிலம் பைது அற்ற புலம் கெடு காலையும்,வாங்குபு தகைத்த கலப் பையர் ஆங்கண்மன்றம் போந்து, மறுகு சிறை பாடும்  5வயிரிய மாக்கள் கடும் பசி நீங்க,பொன் செய் புனைஇழை ஒலிப்ப, பெரிது உவந்து,நெஞ்சு மலி உவகையர் உண்டு மலிந்து ஆட,சிறு மகிழானும் பெருங் கலம் வீசும்,போர் அடு தானைப் பொலந்தார்க் குட்டுவ!  10நின் நயந்து வருவேம் கண்டனம்: புல் மிக்கு,வழங்குநர் அற்றென, மருங்கு கெடத் தூர்ந்து,பெருங் கவின் அழிந்த ஆற்ற, ஏறு புணர்ந்துஅண்ணல் மரையா அமர்ந்து இனிது உறையும்விண் உயர் வைப்பின காடு ஆயின-நின்  15மைந்து மலி பெரும் புகழ் அறியார் மலைந்தபோர் எதிர் வேந்தர் தார் அழிந்து ஒராலின்-மருது இமிழ்ந்து ஓங்கிய நளி இரும் பரப்பின்மணல் மலி பெருந் துறைத் ததைந்த காஞ்சியொடுமுருக்குத் தாழ்பு எழிலிய நெருப்பு உறழ் அடைகரை,  20நந்து நாரையொடு செவ் வரி உகளும்கழனி வாயிற் பழனப் படப்பை,அழல் மருள் பூவின் தாமரை, வளை மகள்குறாஅது மலர்ந்த ஆம்பல்,அறாஅ யாணர் அவர் அகன்தலை நாடே.  25 பதிற்றுப்பத்து - 24. மன்னவன் பெருமையும் கொடைச் சிறப்பும் கூறி வாழ்த்துதல் துறை : இயல்மொழி வாழ்த்துவண்ணம் : ஒழுகு வண்ணம்தூக்கு : செந்தூக்குபெயர் : சீர் சால் வெள்ளி நெடு வயின் ஒளிறு மின்னுப் பரந்தாங்கு,புலி உறை கழித்த புலவு வாய் எஃகம்ஏவல் ஆடவர் வலன் உயர்த்து ஏந்தி,ஆர் அரண் கடந்த தார் அருந் தகைப்பின்பீடு கொள் மாலைப் பெரும் படைத் தலைவ!  5ஓதல், வேட்டல், அவை பிறர்ச் செய்தல்,ஈதல், ஏற்றல், என்று ஆறு புரிந்து ஒழுகும்அறம் புரி அந்தணர் வழி மொழிந்து ஒழுகி,ஞாலம் நின்வழி ஒழுக, பாடல் சான்று,நாடுடன் விளங்கும் நாடா நல்லிசைத்  10திருந்திய இயல் மொழித் திருந்திழை கணவ!குலை இழிபு அறியாச் சாபத்து வயவர்அம்பு களைவு அறியாத் தூங்கு துளங்கு இருக்கை,இடாஅ ஏணி இயல் அறைக் குருசில்!நீர், நிலம், தீ, வளி, விசும்போடு, ஐந்தும்  15அளந்து கடை அறியினும், அளப்பு அருங் குரையை! நின்வளம் வீங்கு பெருக்கம் இனிது கண்டிகுமே!உண்மரும், தின்மரும், வரைகோள் அறியாது,குரைத் தொடி மழுகிய உலக்கை வயின்தோறுஅடைச் சேம்பு எழுந்த ஆடுறும் மடாவின்,  20எஃகு உறச் சிவந்த ஊனத்து, யாவரும்கண்டு மதி மருளும் வாடாச் சொன்றிவயங்கு கதிர் விரிந்து வானகம் சுடர்வர,வறிது வடக்கு இறைஞ்சிய சீர் சால் வெள்ளிபயம் கெழு பொழுதோடு ஆநியம் நிற்ப,  25கலிழும் கருவியொடு கை உற வணங்கி,மன் உயிர் புரைஇய வலன் ஏர்பு இரங்கும்கொண்டல் தண் தளிக் கமஞ் சூல் மா மழைகார் எதிர் பருவம் மறப்பினும்-பேரா யாணர்த்தால்; வாழ்க நின் வளனே!  30 பதிற்றுப்பத்து - 25. வென்றிச் சிறப்பு துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டுவண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்பெயர் : கான் உணங்கு கடு நெறி மா ஆடிய புலன் நாஞ்சில் ஆடா;கடாஅம் சென்னிய கடுங்கண் யானைஇனம் பரந்த புலம் வளம் பரப்பு அறியா;நின் படைஞர், சேர்ந்த மன்றம் கழுதை போகி,நீ உடன்றோர் மன் எயில் தோட்டி வையா;  5கடுங் கால் ஒற்றலின், சுடர் சிறந்து உருத்து,பசும் பிசிர் ஒள் அழல் ஆடிய மருங்கின்,ஆண்டலை வழங்கும் கான் உணங்கு கடு நெறிமுனை அகன் பெரும் பாழ் ஆக மன்னிய-உரும் உறழ்பு இரங்கு முரசின், பெரு மலை  10வரை இழி அருவியின், ஒளிறு கொடி நுடங்க,கடும் பரிக் கதழ் சிறகு அகைப்ப, நீநெடுந் தேர் ஓட்டிய, பிறர் அகன் தலை நாடே. பதிற்றுப்பத்து - 26. வென்றிச் சிறப்பு துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டுவண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்பெயர் : காடுறு கடு நெறி தேஎர் பரந்த புலம் ஏஎர் பரவா;களிறு ஆடிய புலம் நாஞ்சில் ஆடா;மத்து உரறிய மனை இன் இயம் இமிழா;ஆங்கு, பண்டு நற்கு அறியுநர் செழு வளம் நினைப்பின்-நோகோ யானே-நோதக வருமே!  5பெயல் மழை புரவு இன்றுஆகி, வெய்துற்று,வலம் இன்று அம்ம, காலையது பண்பு! என,கண் பனி மலிர் நிறை தாங்கி, கைபுடையூ,மெலிவுடை நெஞ்சினர் சிறுமை கூர,பீர் இவர் வேலிப் பாழ் மனை நெருஞ்சிக்  10காடுறு கடு நெறி ஆக மன்னிய-முருகு உடன்று கறுத்த கலி அழி மூதூர்,உரும்பு இல் கூற்றத்து அன்ன, நின்திருந்து தொழில், வயவர் சீறிய நாடே. பதிற்றுப்பத்து - 27. வென்றிச் சிறப்பு துறை : செந்துறைப் பாடாண் பாட்டுவண்ணம் : ஒழுகு வண்ணம்தூக்கு : செந்தூக்குபெயர் : தொடர்ந்த குவளை சிதைந்தது மன்ற, நீ சிவந்தனை நோக்கலின்-தொடர்ந்த குவளைத் தூ நெறி அடைச்சி,அலர்ந்த ஆம்பல் அக மடிவையர்,சுரியல்அம் சென்னிப் பூஞ் செய் கண்ணிஅரியல் ஆர்கையர், இனிது கூடு இயவர்,  5துறை நணி மருதம் ஏறி, தெறுமார்,எல் வளை மகளிர் தெளி விளி இசைப்பின்,பழனக் காவில் பசு மயில் ஆலும்;பொய்கை வாயிற் புனல் பொரு புதவின்,நெய்தல் மரபின், நிரை கள், செறுவின்  10வல் வாய் உருளி கதுமென மண்ட,அள்ளல் பட்டு, துள்ளுபு துரப்ப,நல் எருது முயலும் அளறு போகு விழுமத்துச்சாகாட்டாளர் கம்பலை அல்லது,பூசல் அறியா நல் நாட்டு  15யாணர் அறாஅக் காமரு கவினே! பதிற்றுப்பத்து - 28. நாடு காத்தற் சிறப்பு துறை : நாடு வாழ்த்துவண்ணம் : ஒழுகு வண்ணம்தூக்கு : செந்தூக்குபெயர் : உருத்து வரு மலிர் நிறை திரு உடைத்து அம்ம-பெரு விறற் பகைவர்பைங் கண் யானைப் புணர் நிரை துமிய,உரம் துரந்து எறிந்த, கறை அடி, கழற் கால்,கடு மா மறவர் கதழ் தொடை மறப்ப,இளை இனிது தந்து, விளைவு முட்டுறாது,  5புலம்பா உறையுள் நீ தொழில் ஆற்றலின்.விடு நிலக் கரம்பை விடர் அளை நிறைய-கோடை நீட, குன்றம் புல்லென,அருவி அற்ற பெரு வறற் காலையும்;நிவந்து கரை இழிதரும் நனந் தலைப் பேரியாற்றுச்  10சீருடை வியன் புலம்-வாய் பரந்து மிகீஇயர்,உவலை சூடி உருத்து வரு மலிர் நிறைச்செந் நீர்ப் பூசல் அல்லது,வெம்மை அரிது, நின் அகன் தலை நாடே. பதிற்றுப்பத்து - 29. வென்றிச் சிறப்பு துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டுவண்ணம் : ஒழுகு வண்ணம்தூக்கு : செந்தூக்குபெயர் : வெண் கை மகளிர் அவல் எறி உலக்கை வாழைச் சேர்த்தி,வளைக் கை மகளிர் வள்ளை கொய்யும்,முடந்தை நெல்லின் விளைவயல் பரந்ததடந் தாள் நாரை இரிய; அயிரைக்கொழு மீன் ஆர்கைய மரம்தொறும் குழாஅலின்,  5வெண் கை மகளிர் வெண் குருகு ஓப்பும்,அழியா விழவின், இழியாத் திவவின்,வயிரிய மாக்கள் பண் அமைத்து எழீஇ,மன்றம் நண்ணி, மறுகு சிறை பாடும்அகன் கண் வைப்பின் நாடு-மன் அளிய!-  10விரவு வேறு கூலமொடு குருதி வேட்டமயிர் புதை மாக் கண் கடிய கழற,அமர் கோள் நேர் இகந்து, ஆர் எயில் கடக்கும்பெரும் பல் யானைக் குட்டுவன்வரம்பு இல் தானை பரவா ஆங்கே.  15 பதிற்றுப்பத்து - 30. வென்றிச் சிறப்பு துறை : பெருஞ்சோற்று நிலைவண்ணம் : ஒழுகு வண்ணம்தூக்கு : செந்தூக்குபெயர் : புகன்ற ஆயம் இணர் ததை ஞாழல் கரை கெழு பெருந் துறை,மணிக்கலத்தன்ன மா இதழ் நெய்தல்பாசடைப் பனிக் கழி துழைஇ, புன்னைவால் இணர்ப் படு சினைக் குருகு இறை கொள்ளும்அல்குறு கானல், ஓங்கு மணல் அடைகரை,  5தாழ் அடும்பு மலைந்த புணரி வளை ஞரல,இலங்கு நீர் முத்தமொடு வார் துகிர் எடுக்கும்தண் கடற் படப்பை மென்பாலனவும்;காந்தள்அம் கண்ணி, கொலை வில், வேட்டுவர்செங் கோட்டு ஆமான் ஊனொடு, காட்ட  10மதனுடை வேழத்து வெண் கோடு கொண்டு,பொன்னுடை நியமத்துப் பிழி நொடை கொடுக்கும்குன்று தலைமணந்த புன் புல வைப்பும்;காலம் அன்றியும் கரும்பு அறுத்து ஒழியாது,அரி கால் அவித்து, பல பூ விழவின்-  15தேம் பாய் மருதம் முதல் படக் கொன்று,வெண் தலைச் செம் புனல் பரந்து வாய் மிகுக்கும்பல சூழ் பதப்பர் பரிய, வெள்ளத்துச்சிறை கொள் பூசலின் புகன்ற ஆயம்முழவு இமிழ் மூதூர் விழவுக் காணூஉப் பெயரும்  20செழும் பல் வைப்பின்-பழனப் பாலும்;ஏனல் உழவர் வரகுமீது இட்டகான் மிகு குளவிய வன்பு சேர் இருக்கை,மென் தினை நுவணை முறைமுறை பகுக்கும்புன்புலம் தழீஇய, புறவு அணி வைப்பும்;  25பல் பூஞ் செம்மற் காடு பயம் மாறி,அரக்கத்தன்ன நுண் மணற் கோடு கொண்டு,ஒண் நுதல் மகளிர் கழலொடு மறுகும்விண் உயர்ந்து ஓங்கிய கடற்றவும்; பிறவும்;பணை கெழு வேந்தரும் வேளிரும், ஒன்று மொழிந்து,  30கடலவும் காட்டவும் அரண் வலியார் நடுங்க,முரண் மிகு கடுங் குரல் விசும்பு அடைபு அதிர,கடுஞ் சினம் கடாஅய், முழங்கும் மந்திரத்துஅருந் திறல் மரபின் கடவுள் பேணியர்,உயர்ந்தோன் ஏந்திய அரும் பெறற் பிண்டம்  35கருங் கட் பேய்மகள் கை புடையூஉ நடுங்க,நெய்த்தோர் தூஉய நிறை மகிழ் இரும் பலி,எறும்பும் மூசா இறும்பூது மரபின்,கருங் கட் காக்கையொடு பருந்து இருந்து ஆர;ஓடாப் பூட்கை, ஒண் பொறிக் கழற் கால்,  40பெருஞ் சமம் ததைந்த, செருப் புகல், மறவர்உருமு நிலன் அதிர்க்கும் குரலொடு, கொளை புணர்ந்து,பெருஞ் சோறு உகுத்தற்கு, எறியும்-கடுஞ் சின வேந்தே!-நின் தழங்கு குரல் முரசே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !