உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாடலீஸ்வரர் கோவில் வைகாசிப் பெருவிழா 16ம் தேதி துவக்கம்

பாடலீஸ்வரர் கோவில் வைகாசிப் பெருவிழா 16ம் தேதி துவக்கம்

கடலூர்:கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் வைகாசிப் பெருவிழா வரும் 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.இதனையொட்டி கடந்த 8ம் தேதி எல்லைக் கட்டுதல், 9ம் தேதி காப்புக் கட்டுதல் உற்சவம் நடந்தது. வரும் 16ம் தேதி காலை 7:45 மணி முதல் 8:45 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. தினமும் இரவு வீதியுலாநடக்கிறது. 20ம் தேதி காலை அதிகாரநந்தி கோபுர தரிசனம், இரவு 10:00 மணிக்கு தெருவடைச்சான், 22ம் தேதி இரவு திருக்கல்யாணம் பரிவேட்டை நடக்கிறது.தொடர்ந்து 24ம் தேதி காலை 8:15 மணி முதல் 9:15 மணி வரை தேர் வடம் பிடித்தல், 27ம் தேதி காலை திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீகம் நிகழ்ச்சி, இரவு திருஞான சம்பந்தர் திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடக்கிறது. விழாக் காலங்களில் வேதபாராயணம், தேவாரம், நாதஸ்வரம் மற்றும் இன்னிசை கச்சேரி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !