மூன்றாம் பிறையை பார்க்கலாமா..ஏன்?
ADDED :4522 days ago
மூன்றாம் பிறையை தாராளமாக பார்க்கலாம். இதையே சந்திரதரிசனம் என்பர். இதனால், செல்வவளம் பெருகும் என்பர். சிவன் மூன்றாம்பிறையைத் தன் தலையில் சூடிக் கொண்டிருப்பதை சுந்தரர், பித்தா பிறைசூடி என்றே சுந்தரர் தேவாரத்தில் போற்றுகிறார். நான்காம் பிறையைத்தான்(சதுர்த்தி திதியன்று) பார்க்கக்கூடாது. ஒருவேளை அன்று கண்ணில் சந்திரன் பட்டு விட்டாலும், விநாயகரை வணங்கி விட்டால் தோஷம் நீங்கிவிடும்.