சுபநிகழ்ச்சியின் போது வாசலில் ஆரத்தி எடுப்பதன் நோக்கம் என்ன?
ADDED :4695 days ago
சுபநிகழ்ச்சி செய்பவர்கள் மீது கண்திருஷ்டி ஏற்படுகிறது. திருஷ்டியைப் போக்கிக் கொள்ள செய்யப்படும் சடங்குகளில் ஆரத்தி எடுப்பதும் ஒன்று. மேலும், சுபநிகழ்ச்சி நல்லபடியாக முடிந்தது என்பதை அறிவிக்கும் முகமாகவும் இது செய்யப்படுகிறது. ஆன்மிக நிகழ்வுகள் முடிந்ததும் மங்கள ஆரத்தி என்ற நிகழ்ச்சி இருப்பது குறிப்பிடத்தக்கது.