உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலின் ரூ.1.32 கோடி சொத்து மீட்பு

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலின் ரூ.1.32 கோடி சொத்து மீட்பு

அரியலுார்: பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 1.32 கோடி ரூபாய் சொத்துகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கையகப்படுத்தினர்.


அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டமைக்கப்பட்ட பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம் மற்றும் கட்டடங்கள் தனிநபரால் ஆக்கிரமித்து பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து, அரியலுார் மாவட்ட அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமணன், கோவில் செயல் அலுவலர் செந்தமிழ்செல்வி தலைமையிலான குழுவினர், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தனி நபரால் ஆக்கிர மிக்கப்பட்ட, 1 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பிலான இடங்களை நேற்று மீட்டனர். ‘கோவிலுக்கு சொந்தமாக சுவாதீனம் செய்யப்பட்ட இடங்கள், தனிநபர் யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. மீறினால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்ற அறிவிப்பு வைக்கப்பட்டது. கோவிலுக்கு எதிரே தனி நபரால் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடத்திற்கும் அதிகாரிகள், ‘சீல்’ வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !