வேணுகோபால பெருமாள் கோவில்கும்பாபிஷேகம் கோலாகலம்.
ஊத்துக்கோட்டை:புதுச்சேரி, ராதா, ருக்மணி உடனுறை வேணுகோபால பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா, கோலாகலமாக நடந்தது.ஊத்துக்கோட்டை அடுத்த, புதுச்சேரி கிராமத்தில் அமைந்துள்ளது ராதா, ருக்மணி உடனுறை வேணுகோபால பெருமாள் கோவில். பழமை வாய்ந்த இக்கோவில் கும்பாபிஷேகம், ஜூன், 21 காலை கோலாகலமாக நடந்தது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஜூன், 21 முன்தினம், 20ம் தேதி மாலை, 6:00 மணிக்கு அனுக்ஞை, பகவத் பிரார்த்தனை, அங்குரார்ப்பணம், யாகசாலை பூஜைகள், ஹோமம், பூர்ணாஹூதி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. ஜூன், 21 காலை, 5:30 மணிக்கு விஸ்வரூபம், கோ பூஜை, திருவாராதனம் ஹோமம், மகாபூர்ணாஹூதி, யாத்ராதானம், கலச புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகளை, தொடர்ந்துகாலை, 9:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.மாலை, 6:00 மணிக்கு பெருமாள், தாயார் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் கிராமத்தில் உள்ள, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கிராம பெரியோர்கள் செய்திருந்தனர்.