குழந்தையின் புத்திசாலித்தனத்திற்கு காரணம் என்ன?
ADDED :4666 days ago
சேற்றிலே முளைத்த செந்தாமரை என்பார்களே, அதுபோலத் தான், நல்ல குழந்தை வாய்ப்பதற்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். வெறும் சேறு நிறைந்த குளம் மட்டுமே தாமரை முளைக்க காரண மாகாது. தாமரைக் கிழங்கு என்னும் வித்தும் அவசியம். அதுபோல மரபுவழி, சூழ்நிலை இரண்டும் குழந்தையின் புத்திசாலித்தனத்திற்கு காரணமாக அமைகின்றன.