உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரூ.1 கோடி மதிப்­புள்ள கோவில் நிலம் மீட்பு

ரூ.1 கோடி மதிப்­புள்ள கோவில் நிலம் மீட்பு

சென்னை: கபா­லீஸ்­வரர் கோவி­லுக்கு சொந்­த­மான, 1 கோடி ரூபாய் மதிப்­புள்ள, நிலம் மீட்­கப்­பட்­டது. மயி­லாப்பூர் கபா­லீஸ்­வரர் நகரில், கபா­லீஸ்­வரர் கோவி­லுக்கு சொந்­த­மான, 1,500 சது­ரடி பரப்­ப­ள­வுள்ள நிலம், கடந்த சில ஆண்­டு­க­ளுக்கு முன், முத்­து­சாமி என்­ப­வருக்கு வாட­கைக்கு விடப்­பட்­டது. ஆனால், சண்­முகம் என்­பவர், அதை ஆக்­கி­ர­மித்து வைத்­தி­ருந்தார். அவரை, அங்­கி­ருந்து வெளி­யேற்ற, இந்து சமய அற­நி­லைய துறையின் சார்பில், சென்னை உரி­மை­யியல் கோர்ட்டில், 1999ம் ஆண்டு வழக்கு தொட­ரப்­பட்­டது. கடந்த 2000ம் ஆண்டில் வழங்­கப்­பட்ட தீர்ப்பில், கோவி­லுக்கு சாத­க­மாக தீர்ப்பு வந்­தது. தீர்ப்பை செயல்­ப­டுத்த, கோவில் சார்பில், 2001ல் மனு­தாக்கல் செய்­யப்­பட்­டது.  நிறை­வேற்று மனுவின் மீதான விசா­ர­ணையில், கோவி­லுக்கு அந்த நிலத்தை சுவா­தீனம் பெற உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது. அதை தொடர்ந்து, நேற்று முன்­தினம், இந்து சமய அற­நி­லைய துறை துணை ஆணையர், ஜெக­நாதன் தலை­மையில், அமீனா மற்றும் போலீசார் உத­வி­யுடன், நிலம் மீட்­கப்­பட்டு, கோவில் வசம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. அந்த நிலத்தின் மதிப்பு, 1 கோடி ரூபாய் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !