உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நான் இல்லை! நாமமே காரணம்!

நான் இல்லை! நாமமே காரணம்!

பாண்டவர்கள், ஆச்சார்யர்கள் அனைவரும் கூடி யிருந்த அவையில் திரவுபதியை கவுரவர்கள் மானபங்கம் செய்தனர். அப்போதுஅவள், ஹே! கிருஷ்ணா! ரக்ஷமாம் சரணாகதாம்! என்று அழுதாள். இரண்டு கைகளையும் குவித்து, கோவிந்த நாமத்தை ஜெபித்தாள். அப்போது இழுக்க இழுக்க வண்ண வண்ண ஆடைகள் தொடர்ந்து வரத்தொடங்கின. கிருஷ்ணர் அவதாரத்தில் திரவுபதியை உடனடியாக காப்பாற்றாமல் விட்டது என் குறை தான். திரவுபதிக்கு ஆடை கிடைத்ததற்கு  கூட நான் காரணமில்லை. கோவிந்த நாமமே காரணம், என்று பகவானே ஒத்துக் கொண்டார். கோவிந்தனின்
குறையைத் தீர்க்கும் விதத்தில், திருப்பாவையில் ஆண்டாள் குறைவொன்றும் இல்லாத கோவிந்தா என்று போற்றுகிறாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !