திருப்பதி தரிசனம் பக்தர்கள் கூடுதல் நேரம் காத்திருப்பு!
ADDED :4546 days ago
திருப்பதி: தொடர் விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்கள் அதிகளவில் கூடியதால் சாமி தரிசனம் செய்வதற்கு 15 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வெள்ளி ,சனி, ஞாயிறு தொடர் விடுமுறையாக அமைந்திருப்பதால் பக்தர்களின் கூட்டம் அதி்கரித்து காணப்படுகிறது. மேலும் மலைப்பபாதையில் தரிசனம் செய்வதற்கு எட்டு மணி நேரம் ஆவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.